என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Friday

ஆட்டு தாடிக்கு ஆப்பு!


புதியதாக Bajaj Pulsar 220 cc வாங்கிய மமதையில் இருந்த நண்பன் ஒருவன் நேரிட்ட கோர சம்பவத்தை தான் இங்கு இந்த இடுகையில் செதுக்கி உள்ளேன். இவன் தனது வாகனத்தின் சாவியை நுழைத்து வண்டியின் என்ஜின் சத்தம் கேட்டதும், மனதில் R1 Racer திரு. Valentino Rossi என்ற நினைப்பு வந்துவிடும். ஆனால் இவனுக்கு ஒரு மிதிவண்டியை கூட ஒழுங்காக மிதிக்க தெரியாது என்பதுதான் உண்மை. தாடையின் ஓரத்தில் சிறிதளவு ரோமங்கள் எட்டி பார்க்கும் இவனுக்கு French Beard (அதாவது ஆட்டு தாடி) வைக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதற்காகவே முகத்தில் தாடையின் ஓரத்தில் ஒட்டிகொண்டிருக்கும் முடிகளை சீராக ஒருங்கிணைத்து வைத்து சுற்றி திரிந்துகொண்டிருந்தான். இன்று அந்த ஆட்டு தாடி ஆசையின் மேல் விழுந்தது ஒரு 6000watts இடி. 

மதியம் சுமார் 1:30 மணியளவில், வயிற்று பசி வாட்டி எடுக்க, கடகடவென  அலுவலகத்தில் இருந்து வீட்டிற்க்கு கிளம்பினான் தனது வண்டியின் உதவியுடன். பசி மயக்கம் கண்ணை மறைக்க ஆரம்பித்த நிலையில், வாகனத்தின் வேகத்தை அதிகபடுத்தினான். திடீரென்று வண்டியின் வேகம் குறைந்தது. Traffic Signal!. பச்சை விளக்கு எறிந்தவுடன் மின்னல் வேகத்தில் செயல் பட்ட அவன், தனக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் வாகனத்தின் மேல் சனி பகவான் உட்கார்ந்து சவுக்கை ஆட்டி சவாரி செய்வதை கவனிக்கவில்லை. திடீரென்று தனக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனம் நிற்க, பின்னால் வந்த இவன் தனது வேகத்தை கட்டுபடுத்த முடியாமல், அந்த நின்ற வாகனத்தின் அடியில் தனது வண்டியை park செய்துவிட்டான். எழுந்து நின்று, அருகில் இருக்கும் வாகனம் ஒன்றின் கண்ணாடியில் தனது முகத்தை பார்க்க........ ஓஓஓஓஓஓஓஓ வென ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டான். காரணம் அவன்  முகத்திலோ, உடம்பிலோ எங்கும் அடிபடவில்லை. போய் விழுந்த வேகத்தில் கிழிந்தது அவனது தாடை மட்டுமே. நல்ல வேளையாக Helmet அணிந்திருந்ததால், தலை தப்பியது. 

இதன் மூலம் நான் கற்ற பாடம்: 
சர்ர்ர்ர்ர்ர்ர்............. என சென்றால் சறுக்கி விடும்.

16-12-2010


16.12.2010. மறக்க முடியாத நாள். ரொம்ப காலமாய் என் காலை சுற்றி இருந்த பாம்பு விலகிய  நாள். கடந்த இரண்டு ஆண்டுகளாய் என்னை ஆட்டிபடைத்த பட்சியை அடித்து துரத்திய நாள். என் வளர்ச்சியை ஒடித்து முடக்கி, கிடப்பில் வைத்திருந்த கிரகத்தை விரட்டி விண்ணை நோக்கி ஓடச்செய்த நாள். தமிழக அரசாங்கமே ஒன்று சேர்ந்து என்னை பாராட்டி பட்டயம் வழங்கிய நாள். "அப்டி என்ன தான் டா நாள் அது?"  என்று உங்கள் மனது அந்த நாளை பற்றி தெரிந்து கொள்ள, போருக்கு காத்திருக்கும் காவலனை போல சினங்கொண்டு எழுவதை என்னால் உணரமுடிகிறது.. நீங்கள் கடுப்பாகி கல் எடுத்து எரியும் முன்பு சொல்லிவிடுகிறேன் அந்த நாளை பற்றி.

அந்த நாளை பற்றி கூற, போதாது ஒரு ஜென்மம். எனினும் ஒரே வரியில் கூறவேண்டுமானால்.........................


ஆத்தா!  நான் பாஸ் ஆயிட்டேன்!!!!

இப்போது புரிந்திருக்கும் எனது இந்த மகிழ்ச்சிக்கு காரணம் என்னவென்று. ஆம்.. நீண்ட நாளாய் வைத்திருந்த அறியர் பேப்பர் ஒன்றை கண கச்சிதமாக கசக்கி தூக்கி எரிந்து விட்டேன். அகிலமே போற்றும் அளவில் 64 மார்க். தமிழகமே பாராட்டி, எனக்கு இணைய தளத்தில் சான்றிதழ் வழங்கி உள்ளது. "அதென்ன சான்றிதழ்?" என்று பொறாமையில் கேட்கும் உங்களின் mind voice-ஐ நான் catch பண்ணிட்டேன். அதுதான் என்னுடைய ரிசல்ட் காப்பி. ஹி ஹி ஹி.........

Monday

வாத்தியார் ஆகிய வானரம்


வாத்தியார் - ந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிவதற்கு முன் சேர்த்து விட்டேன், படித்த கல்லூரியிலே ஆசிரியராக. முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கணிப்பொறி வாத்தியார். 

அட கடவுளே, உனக்கு இவன் வேலையில் சேரும் நாளன்று காலையில் மட்டும் கண் குருடாகிவிட்டதா, இப்போ மட்டும் அந்த சுனாமி எங்கே ஓடி போய் ஒளிந்து விட்டது. என்று சக நண்பர்களின் கொலைவெறி கண்ணை கட்டியது. நானே இப்படி ஒரு பதவிக்கு வந்ததை எண்ணி அச்ச பட்டேன். ஏனெனில், படிக்கும் வயதில் நான் அந்த கல்லூரிக்குள் செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. அதையெல்லாம் விவரிக்க இந்த ஒரு வலைபதிவு பத்தாது. அவ்வளவு அயோகியத்தனம், மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கிதனம் செய்து விட்டேன் அந்த கல்லூரிக்குள். எப்படியோ இனியாவது ஒழுங்காக இருக்க முயற்சி செய்கிறேன். பாப்போம்....

Tuesday

கோழியும் நானும்!!!!!


                    நேற்று மாலை சற்றே சூரியன் தாழ்ந்த நேரம், வானம் தன் நிறத்தில் இருந்து மாறுபட்ட வேளை, கல்லூரி மணி ரிங்கக்க்க்க் என்று ஒலித்த மறுநொடி, ஓரமாய் உட்கார்ந்து இருந்த நான் புயல் வேகத்தில் எழுந்து சூறாவளி போல ஓட ஆரம்பிதேன் எனது வீட்டை நோக்கி. காரணம், 5 மணிக்கு கிடைக்கும் சூடான காபி. ஹோப் காலேஜ் நெருங்கும் போது எனது சக வாத்தியார்கள் இருவர் , "இங்க கோழி க்ரில் நல்ல இருக்கும் சார்" என்று வெறுபேத்த, சரி வாங்க போகலாம் என்றேன். சீக்கிரம் போனா தான் கிடைக்கும் சார், லேட் ஆச்சுனா தீர்ந்து போய்டும் னு அவர் சொல்லி முடிபதற்குள், சோத்துக்கு அலையும் பிச்சைகாரன் கூட மெதுவாகத்தான் சென்றிருப்பான் போலும். நான் அவனை விட வேகமாய் செயல்பட ஆரம்பிதேன். ஏனென்றால், அவளவு பிரியம் அந்த கடைநாசமா போன கொக்கரகோ மீது. ஐந்து நிமிடம் முன்பே அவர்கள் சொன்ன கடையை அடைந்து விட்டோம். கடைக்குள் நுழையும்போது காட்டில் இருக்கும் கரடிக்குட்டி வேஷ்டி கட்டி வந்துவிட்டது என்று பதறி போய், அருகில் அமர்ந்து பார்த்தால்............

அது அந்த கடையின் அந்த கடையின் முதலாளி.....

வாங்க சார், என்ன வேணும்? என்று கனத்த குரலில் கேட்க, மிரண்டு போன நான் எனது சக வாத்தியார்களை முன்னால் விட்டு, பின்னல் வந்த வண்ணம் சென்றேன்.
அப்பாட, ஒரு வழியாக எல்லா ஆபத்தையும் தாண்டி கடையின் மொட்டை மாடியில் அழகாக அமைத்து இருந்த அந்த பூந்தோட்டத்தின் நடுவில் உட்கார்ந்து சர்வர்-இன் வருகையை எதிர் பார்த்து கொண்டிருந்தேன். சில மணித்துளியில் அவரும் வந்து விட்டார். எப்படியோ இன்று ஒரு முழு கோழியை வேட்டையாடி விடவேண்டும் என்று வெறியோடு இருந்த எனக்கு, நன்றாக கொழுக் மொழுக் என்று வளர்ந்த கோழியின் மேல் சற்றே மசால் தூவி, எண்ணெய் விட்டு, பெப்பர் தடவி, சுட சுட எனது டேபிள் மேல் வந்து கிடைத்தது.

அந்த அரைமணி நேரம் எனக்கும் கொழிக்கும் நடந்த சண்டையில் ஜெயித்தது நானே...
ஆற அமர ஒரு கோழி பிரியாணி வேறு.

கடைசியில், கொஞ்சம் சோம்பும், இரண்டு பல் குத்தும் குச்சியும் இனாமாய் கிடைத்தது..
ஒரு பெரிய ஏப்பம் விட்டு, அந்த கடை முதலாளி "காட்டு கரடி"இடம்  நன்றி சொல்லி கிளம்பினோம்.
அடடடடடா..........
என்னே தமிழனின் கை பக்குவம்..
இதுபோல் கோழி சாப்பிட எடுக்க வேண்டும் இன்னொரு ஜென்மம்....


கருத்து: மிருகங்களை வதைக்காதீர்கள். :-)

Wednesday

சொட்டை தலையில் மயிர்!!!

இனி இல்லை இந்த கவலை...
இந்தியர் ஒருவர் சிறந்த முறையில் கண்டுபிடித்த அறிய வகை மருத்துவம்.

சொட்டை தலையில் முடி வளர...
குறிப்புகள் பின்வருமாறு.
1. தினமும் 5 சிவப்பு முள்ளங்கி (Carrot).
2. சிவப்பு முள்ளங்கி சாறு ஒரு கிண்ணம் குடிக்கவும் தினமும். 
3. தினமும் சுத்தமான வெங்காய சாரும் சிறு எலுமிச்சை துளிகளும் சேர்த்து மயிர் இல்லாத இடத்தில் தடவவும்.
4. இருபது நிமிடம் ஊற விடவும் .
5. சுத்தமான விளகெண்ணை தலையில் தினமும் தேய்த்து வர ஒரு மாதத்தில்   வித்தியாசம் கிடைக்கும். 
6. இந்த எளிய மருத்துவம் ஆரம்பித்த ஆறு மாதத்தில் தலை மயிர் காடுபோல் வளர்ந்துவிடும்.

Wednesday

மந்திரிகளுக்கு முந்திரி



பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் போது, பிரதமர் அலுவலகத்தின் அனுமதி இல்லாமல், மத்திய அமைச்சர்கள், தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யக் கூடாது' என, மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதேபோல், மாநில முதல்வர்களின் வெளிநாட்டு பயணத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை செயலகம் இது குறித்து, அனைத்து அமைச்சரவைக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத. பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும் போது, பிரதமர் அலுவலகத்தின் முறையான அனுமதி இல்லாமல் மத்திய அமைச்சர்கள், வெளியூர் பயணம் மேற்கொண்டு நாட்டை காப்பாற்றுகிறோம் என்று கூறி விட்டு, தனிப்பட்ட முறையில் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தங்கள் சுற்றமும் நட்பும் சூழ்ந்த மக்கள் கூட்டத்தை கூடி கொண்டு சர்ர்ர்ரர்ர்ர்ரர் என்று விமானத்தில் ஓடி விடுகின்றனர். இனி இந்த உடான்ஸ் வேலை எல்லாம் எங்களிடம் நடக்காது என்று பிரதமர் அலுவலகம் உஷாராகி விமான பயணங்களுக்கு தடை விதித்துவிட்டது. இனி இதுபோன்றபொதுப்பணி பயணத்தின் போது, சம்பந்தபட்ட அமைச்சரவையின் அதிகாரிகளோ, ஊழியர்களோ அமைச்சர்களின் உடன் செல்லக் கூடாது. அதேபோல், மாநில முதல்வர்கள், மாநில அமைச்சர்களும், தங்களின் வெளிநாட்டு பயணத்துக்கு முன், அது குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு தெரிவிப்பதோடு, வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியையும் பெற வேண்டும்.மத்திய அமைச்சர்கள் அலுவல் ரீதியான வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போதும், அதுகுறித்து 15 நாட்களுக்கு முன்னதாகவே, வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதேபோல், பயணத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே, பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.வெளிநாட்டு அரசுகளிடமோ, சர்வதேச அமைப்புகளுடனோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளுடனோ நேரடியாக தொடர்பு கொண்டு பயணத்துக்கு அனுமதி கோரக் கூடாது. அதற்கு முன், வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும்.அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம், சம்பந்தபட்ட நாடுகளின் அழைப்பின் பேரிலேயே பரிசீலிக்கப்படும். மேலும், இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் நாளையும், அங்கிருந்து திரும்பும் நாளையும் முறைப்படி முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய மந்திரிகள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது பற்றி மத்திய அரசு கண்டித்தது. ஆனால் கூட்டணி அரசாக இருப்பதால், மந்திரிகளின் வெளிநாட்டு பயணம் அதிகளவில் இருந்தது. மேலும்  செயலக அதிகாரிகளும் இப்பயணத்தில் ஈடுபடுகின்றனர்.மத்திய அரசு சிக்கன நடவடிக்கை என்ற அடிப்படையில், மந்திரிகள் பயணம் குறித்து அதிக கவனம் தேவை என்று குறிப்பிட்டிருந்தும். தற்போது பிரதமர் அலுவலத்தின் இந்த அறிக்கை இவ்விஷயத்தில் அதிக கெடுபிடி காட்ட  மத்திய அரசு முன் வந்திருக்கிறது. மாநில முதல்வர்கள் வெளிநாட்டு பயணமும் முன்கூட்டியே பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Saturday

காவல்துறையிடம் நண்பனின் நாடகம்..

தந்திரமாக தப்பித்த துணிகர செயல்...



மதியம் சுமார்  12 மணி அளவில், கோவையில் உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு முக்கிய இடத்தில், தனது இரண்டு சக்கர வாகனத்தில் புயலாய் சீரிகொண்டிருந்த என் நண்பனை, திடீரென்று தமிழ்நாடு போக்குவரத்துக்கு  காவல்துறையினர் அவன் முன் சீறி பாய்ந்து சுற்றி வளைத்தனர். பிறகு தான் தெரிந்தது, இந்த கருன்காளியிடம் தலை கவசம் இல்லை என்று.....

செய்வதறியாது திகைத்து போன அவன், எப்படி தந்திரமாக தப்பித்தான் என்பது பின் வருகிறது...
காவல்: தம்பி, நிறுத்து நிறுத்து.... வண்டிய நிறுத்து..
நண்பன்: ஆஹாஆஆஆஆஆ... மாட்டிகிட்டோமே.....
காவல்: தம்பி, வண்டிய இவ்ளோ வேகமா ஓட்ட கூடாதுன்னு தெரியாத.. அறிவு இல்லையா உனக்கு.. எதுக்கு இவ்ளோ வேகமா வர்றே?
நண்பன்:  இன்ஸ்பெக்டர் அய்யா, என்ன மன்னிச்சுருங்க அய்யா.. உங்க முன்னாடி நிக்குறதுக்கு அருகதை இல்லாம தான் வண்டிய வேகமா ஓட்டிட்டு போய்டேன் அய்யா..
காவல்: என்ன தம்பி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி பேசுறே? 
நண்பன்: உங்கள பாத்தா அப்டியே எங்க அப்பா மாதிரி கம்பீரமா இருக்கீங்க. நான் லைசென்ஸ் கொண்டு வர மறந்துட்டேன் அய்யா. என் அப்பா கிட்ட நான் எப்பவும் பொய் சொன்னதில்ல, அதனால தான் உங்க கிட்ட சொல்ல மனசு வரல..
மனம் கனிந்த காவல்: சேரி தம்பி, பாது பத்ரமா வீட்டுக்கு போ.. என்று அவனை தட்டி குடுத்து அனுப்பிவிட்டு விட்டார்...


இந்த கணிசமான பேச்சில் அவன் தலை கவசம் அணியவில்லை என்பதை மறந்து மண்டை குழம்பி விட்டது, நம் மாநகரத்திற்கு....





Share |

Monday

மொழியின் மறுபக்கம்.....

ரு வழியாக செம்மொழியான தமிழ் மொழியை நன்றாக வளர்த்து வாலிபம் ஆக்கிவிட்டோம். இனி எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டோம். இக்கணம் எனக்கு ஒரு சிறிய கவிதை சிறகடித்து பறக்கிறது...


ஆண்டாண்டு காலங்களுக்கு முன்னால் பிறந்த தமிழ் மொழியை வளர்க்க, ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கோவையிலே! 

           ஆனால் நேற்று பிறந்த தமிழ் ஈழ மனிதனின் உயிரை காக்க,
           இந்தளவு கூட்டம் அகப்படவில்லை என் பார்வையிலே! 

 என்னே நம் மனிதர்களின் உயர்ந்த உள்ளம்.. 

சிந்தியுங்கள்... அவனும் நம் உடன் பிறவா சகோதரன் தான்...

Wednesday

இளைய தலைமுறையின் விடிவெள்ளி

தமிழக  மக்கள் மிகவும் எதிர் பார்த்துகொண்டிருக்கும் அந்த சூர புயல், தமிழ் தென்றல், மக்களின் மன்னன், பெண்களின் பாதுகாவலன், புரட்சி பீரங்கி, செம்மொழி செம்மல், தனது அடுத்த படைப்பை இந்திய மக்களுக்கு அளித்திருக்கிறார். அனைவரும் இந்த அறிய பொகிஷத்தை கண்டு களித்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துரைக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.



இளைய தலைமுறையின் விடிவெள்ளி.


நன்றி.











 
 ....ரசித்ததில் ருசித்தது....



 மிக மிக உண்மையான உண்மை.

A Full True Story of a Human Being. Must Watch.

Friday

இனி இயலாதவர்களும் Engineer ஆகலாம்....



                       ...விதை...
                                         (For Quality Education)

என் உரையை தொடங்கும் முன்பு, இந்த விதையை என் தளத்திலும் விதைததற்கு நான் பெருமை படுகிறேன்.

நன்றி : அகரம் Foundation .

தை திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த இனிய நாளில் நமது தமிழ் திரையுலக நடிகர் திரு. ச. சூர்யா (AGARAM FOUNDATION) அவர்கள் தூவிய விதை ஒரு ஆலமரமாக விளைந்து செழிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்போ மேட்டருக்கு வருவோம்.
 "என்னால இனிமே படிக்கவே முடியாத மா?"
"எனக்கு மார்க் நெறைய இருக்கு ஆனா காலேஜ் ல சேர காசு இல்ல.."
"நான் ஒரு டாக்டர் ஆகமுடியுமா?."
இனி இந்த கேள்விகளுக்கு இடம் இல்லை...
திரு. நடிகர் சூர்யா அவர்கள் தனது அகரம் foundation என்ற குழுமத்தில் இருந்து புதியதாக "விதை" என்ற ஒரு பகுதியை தொடங்கி இருக்கிறார். இதை பற்றிய கருத்துகள் பின்வருமாறு:
குறிப்பு: agaram.in


Life is like two sides of a coin, people who are in need of help and people who are able to and willing to offer it. The same can be said about educational assistance. Just as a Blood bank enables the donor to donate blood to save the life of someone in need; Our database aims at introducing our patrons to the  worthy and deserving candidate, to whom quality education would grant a fresh lease of life. In this age where quality education comes at a cost that not everyone can afford, there are Samaritans who are willing to offer financial assistance to those in need. Agaram foundation had been generating its own sources of funds so far and as per policy of Agaram, we had not been encouraging funds from individuals but Many socially responsible individuals and organizations have found agaram to be a reliable link  and have been  approaching  us , expressing willingness to offer financial assistance for imparting education to the needy. It is hence that we decided to be the bridge between the deprived candidate and quality education which is made possible through a sponsorship from our Patron.

A small deed by someone can create a big difference in another’s life. Agaram with the help of Agram volunteers who are specially trained for this purpose work towards identifying and authenticating the deserving candidate and also the cost associated with sponsoring quality education for the candidate. Depending upon the quantum of sponsorship and preferences recorded with us, details of the Sponsorship and Educational Institution for the appropriate Candidate are then made available to the benefactor. Upon confirmation the details of the Sponsorship (Candidate, Benefactor, Educational Institution etc…) are then recorded on the database, post which the Benefactor can then directly provide their contribution to the respective educational institution. On behalf of the benefactor we also maintain the academic records of those students chosen for sponsorship.

நன்றி ...


Tuesday

பொங்கல் நா என்ன?
                              ஒரு கவர் ஸ்டோரி. 



பொங்கல் என்றல் உடனே நம் நினைவிற்கு வருவது..... வயிறு முட்ட தீனி தின்பது, விசேஷ சாப்பாட்டை ரவுண்டு கட்டுவது, கல் போன்ற கரும்புடன் சண்டை போடுவது, குச்சி மிட்டாயயுடன் குஸ்தி போடுவது, ஊர் திருவிழா, மாடுகளுக்கு பெயிண்ட் அடித்து mental  ஆக்குவது, போகி என்ற பெயரில் நல்ல துணிகளை நாசமாக்குவது போன்ற நற்செயல்கள் தான்.

இதே நாளில் நண்பர்கள் ஒன்று சேர்ந்தால்.....  பெண்களிடம் சிலுமிஷம் செய்து செருப்படி வாங்குவது, மக்கள் கூடி இருக்கும் பகுதிக்கு சென்று scene போடுவது, நன்றாக ஓடி கொண்டிருக்கும் சினிமா ஆரங்கிற்கு சென்று சேட்டை செய்வது,  வாகனத்தில் சுற்றி வம்பு சண்டை இழுப்பது, கடைசியாக ஆளுகொரு quarter அடித்துவிட்டு மட்டை ஆகி விடுவது போன்ற புண்ணிய செயல்களில் ஈடுபடுவர்..

ஆனால் இதை எல்லாம் தாண்டி ஒரு நல்ல விஷயம் இருக்கிறது... அது என்ன என்று அறிந்துகொள்ள, எனக்குள் இருக்கும் bulb ஐ கொஞ்சம் பிரகாசமாக எரிய விட்டேன்... அதில் கிடைத்த விடை... பின்வருமாறு..

பொங்கல் பண்டிகையின் விசேஷங்கள்:
1 . Pongal is the only Hindu festival which follows solar calendar.
2. It was originally celebrated by farming community, as days passed now it is celebrated by all of us.
3. It is the same as "Thanks giving Day" for farmers because of their Hard Work in cultivation.
4. Four days of பொங்கல்

     i. போகி பொங்கல் (Indran Pongal)

This is celebrated in honor to the lord Indran (God of Clouds and Rains)

     ii. தை பொங்கல் (Surya Pongal)

This celebration is dedicated to our Sun God. On this day the granaries are full, the sun shines brightly, trees are in full bloom, bird-songs resound in the air and hearts overflow with happiness that get translated into colorful and joyous celebrations.This is the First Day of the Tamil month "தை".

      iii. மாட்டு பொங்கல் (Cattle Day)

This celebration is full and fully dedicated to the Cattles. s a day when cattle are given a well deserved day of rest and are given pride of place. Important event on this day is "ஜல்லிக்கட்டு". .

      iv. காணும் பொங்கல் (Thiruvalluvar Day)

The fourth day of the three-day Pongal celebrations is called Kaanum Pongal. In few places this day is also known as Karinaal or Thiruvalluvar Day. It is dedicated to the sun god, Surya and has its roots in ancient Brahminical tradition. Since Pongal is a rural, agrarian based festival that celebrates the harvests, the sun is a vital part of the proceedings. This is because the Sun is the symbol of life on Earth. Without the Sun, crops cannot sprout and grow. Without the Sun, harvests will not be plentiful.

நன்றி...
அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Monday

!!! ... நாயும் நானும் ...!!! 
(கரூர் - ல் நடந்த கொடூர சம்பவம்)

அன்று முழு நிலவு... இரவு சுமார் 10 மணி... நானும் எனது மச்சானும் மகா குடி போதையில் இருந்த நேரம்... மப்பு தலைக்கு மேல் ஏறி பரத நாட்டியம் ஆடி கொண்டிருந்தது..
 கடைசியாக ஒரே ஒரு குவாட்டர் மட்டும் மிச்சம் இருந்தது. அடுத்த 5 நிமிடத்தில்
 அதையும் குடித்து விட்டு 12 மணி வாக்கில் வீட்டிற்கு சென்றோம். அப்போது தான் அந்த வெறித்தனம் அரங்கேறியது.

நான் உள்ளே நுழைந்ததும் என் மச்சான் வீட்டில் இருந்த நாய் ஒன்று என்னை மிக வெறித்தனமாக உற்று நோக்கியது. நானும் ஏதோ மனநலம் குன்றிய நாய் போல என்று சற்றே ஒதுங்கி சென்றேன். அப்போது வீணாப்போன என் மச்சான் என்னிடம், "உங்க ஊரு நாய் மாதிரி இத நெனசுடதீங்க, இது கடிச்சு வெச்சுடும்" னு என்னை வெறுபேத, எனக்குள் இருந்த Bagpiper - உம நன்றாக குழல் ஊத, நான் நம்ம ஊர் திமிரை காட்டுறேன் னு சொல்லி அந்த நாய்யை கிட்ட நெருங்கி, கடுங்கோவதில் வெறிக்க வெறிக்க முறைத்து பார்த்து கொண்டிருந்தேன். அது என்ன கோவத்தில் இருந்ததோ, கடுகளவும் யோசிக்காமல் என்னிடம் பாய்ந்து விட்டது. நானும் அவசரத்தில் அருகில் இருந்த பூட்டு ஒன்றை எடுத்து அதன் நடு மண்டையில் நச்சென்று போட்டு விட்டேன்.

அடேங்கபா............

அதற்கு பிறகு அது போட்ட சப்தம்... வீட்டில் இருந்த அனைவரும் விழித்து கொண்டனர். எங்கள் குட்டும் வெளிப்பட்டு விட்டது. நானும் எனது மச்சானும் நன்றாக மாட்டி கொண்டோம்.

Moral: எவ்வளவு மப்பில் இருந்தாலும் நாய் அருகில் செல்லவேண்டாம்...

நன்றி..

Sunday

......வெள்ளரிகாயின் வேலைதனம்...... 

இன்று வானம் சற்றே மேக மூட்டத்துடன் காண பட்டதால்,  பொறுமையாக படுத்து உறங்கிவிட்டேன். மதியம் சுமார் 1  மணி அளவில் என் கண்ணுக்குள் யாரோ வெல்டிங் வைப்பது போல் ஒரு உறுத்தல். என்ன என்று அறிந்து ஆராய்ந்து பார்த்ததில், காலை கதிரவன், மட்ட மதியத்தில் ஓவர் ஒளியை பரப்பி சூடு பிடிக்க வைத்து, எனது கண்ணுக்குள் கபடி விளையாடி இருப்பது தெரிய வந்தது... உடனே என் தாய் பாட்டி வைத்தியத்தை மேர்ந்கொண்டு வந்த சூட்டிற்கு செருப்படி கொடுத்து வெளியே விரட்டி விட்டார்... அது என்ன அந்த அசுர வைத்தியம்???

அங்கு தான் வெள்ளரிக்காயின் வேலைதனம்.கூடாரம் கட்டி ஒளிந்து இருக்கிறது. அந்த குளுமை நம் கண்களில் பட்ட 5  நிமிடத்துக்குள் எனக்குள் வந்த ஒரு சிலுசிலுப்பு, full அடித்தாலும் கிடைக்காத இன்பம்..வலியும் விரைவில் குணம் அடைந்து விட்டது.

குறிப்பு: வெள்ளிரிக்காய் சரக்கடிக்க மட்டும பயன்படாது.. இந்த மாதிரி சூடுகளை சுளுக்கு எடுக்கவும் பயன்படும் என்பதை இக்கணம் நான் தெரிவிக்க விரும்புகிறேன்....

நன்றி...

Saturday




    
என்ன கொடுமை சார் இது!!!!!
----------------------------------------------------------------------------------------------------------------------------

குடுத்து வெச்ச மவராசன் திரு. ஜேக்கப் ஷூமா





தென்ஆப்பிரிக்காவின் அதிபராக இருப்பவர் ஜேக்கப் ஷூமா (வயது 67). இவருக்கு திருமணமாகி விட்டது. ஏற்கனவே இவர் 4 பெண்களை மணந்துள்ளார். இந்த நிலையில் தற்போது 5-வதாக ஒரு பெண்ணை நேற்று திருமணம் செய்தார். அவரது பெயர் தோபிகா மடிபா ( வயது 37).

இவர்களது திருமணம் தென்ஆப்பிரிக்க நாட்டின் பாரம்பரிய முறைப்படி காண்ட்லா நகரில் நடந்தது. இவர்களின் திருமணத்தில் காண்ட்லா நகர மக்களும், அதை சுற்றியுள்ள கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

இவர்கள் பாரம்பரியமான விலங்குகளின் தோலினால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். தென் ஆப்பிரிக்காவில் தற்போது குளிர் காலமாகும். கொட்டும் பனியில் இந்த ஜோடியின் திருமணம் நடந்தது.

அதிபர் ஷூமாவுக்கு கடந்த 1973-ம் ஆண்டு சிஷா கிள் குமாலோ என்ற பெண்ணுடன் முதல் திருமணம் நடந்தது. இவரை தொடர்ந்து நொம்பு மெலோலா என்பவரை இவர் 2-வது திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் அதிபரின் 5-வது திருமணத்தில் கலந்து கொண்டனர்.
ஷூமா 3-வது மனைவி தற்கொலை செய்து கொண்டார். 4-வது மனைவி லாமினியை ஷூமா விவாகரத்து செய்துவிட்டார். தற்போது இவர் தென்ஆப்பிரிக்காவில் உள்துறை மந்திரியாக இருக்கிறார்.

5-வதாக திருமணம் செய்து இருக்கும் தோபியா மடிபாவுடன் அதிபர் ஷூமா ஏற்கனவே குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த மே மாதம் ஷூமா அதிபராக பதவி ஏற்றபோது தனது குழந்தைகளுடன் மடிபா விழாவில் கலந்து கொண்டார்.

அப்போதே அவருக்கு ஷூமாவின் மனைவிக்குரிய அஸ்தஸ்து வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இவரை திருமணம் செய்து தனது அதிகாரப்பூர்வ மனைவியாக ஷூமா அறிவித்துள்ளார்.

5 மனைவிகளின் மூலம் அதிபர் ஷூமாவுக்கு 18 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே 6-வது திருமணத்துக்கு அவர் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது என்பது இதுதானோ.

ரசித்த இடம்: மாலை மலர்.


           Post your Comments here..




Friday

 மனை ஏமாற்றிய யாமகுச்சி,  
     இறைவனடி சேர்ந்தார்.





லகப்போர் 2-ம் உலகப்போரின்போது அமெரிக்க விமானங்கள் ஜப்பான் மீது பறந்து ஹிரோசிமா, நாகசாகி ஆகிய 2 நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசின. இதில் ஹிரோசிமா நகரில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் பலியானார்கள்.
 

இந்த அணுகுண்டு வீச்சில் உயிர் தப்பியவர் யாமகுச்சி. இவர் நாகசாகியில் உள்ள பிட்சுபிசி கம்பெனியில் என்ஜினீயராக பணி புரிந்தார்.

முதல் குண்டு 1945-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி ஹிரோசிமா நகரின் மீது வீசப்பட்டது. யாமகுச்சி இருந்த தெருவில் இருந்து 2 கி.மீ. தொலைவில் குண்டு விழுந்து வெடித்தது. இதில் யாமகுச்சியின் தோள் பட்டையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

2 நாட்கள் கழித்து யாமகுச்சி அருகில் உள்ள நாகசாகி நகருக்கு சென்று பெற்றோருடன் சேர்ந்தார். அவர் போன 2 நாளில் நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. இதிலும் அவர் உயிர் தப்பினார். என்றாலும் அந்தப்பகுதி முழுவதிலும் அணு கதிர்வீச்சு ஏற்பட்டது.

யாமகுச்சிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டது. இதில் அவர் நேற்று இறந்தார். புற்று நோயுடன் போராடி வந்தார். 93 வயது வரை வாழ்ந்தார். டபுள் ரேடியேசன் என்ற பெயரில் எடுக்கப்பட்ட செய்திப்படத்தில் யாமகுச்சி நடித்தார். அதில் அவர் அணுகுண்டு வீச்சு குறித்து சிறப்புரையாற்றினார். அணு குண்டுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
இரண்டு குண்டுவீச்சிலும் தப்பிய ஒரே நபர் யாமகுச்சி யாவார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள், 5 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.








I'm on the way to see ur comments.. Since u didn't write it... Then do it now..





Thursday

...காவல்துறையின் களங்கமில்லா கண்டிப்பு...




        நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் எனது நண்பனை பார்க்க அவன் வீட்டிற்கு சென்றிருந்தேன். போகும் வழியில் மிக களைப்பாக இருந்த காரணத்தால் ஒரு கடையின் முன்பாக எனது வண்டியை நிறுத்தி ஒரு குளிர் பானம் ஒன்று வாங்கி குடித்தேன். பிறகு கொஞ்சம் மப்பு தட்டியது போல் இருந்ததால் ஒரு சிகரட் ஒன்று வாங்கி வந்த மப்பை மண்டையில் இருந்து வெளியே விரட்டி கொண்டிருந்தேன். இந்த கவனத்தில், நான் நின்று கொண்டிருந்த இடம் ஒரு பொது இடம் என்பதை அப்போது நான் உணரவில்லை. அந்த வழியாக வந்த ஒரு காவல் துறை உயர் அதிகாரி என்னை கையும் களவுமாக பிடித்துவிட்டார். நான் செய்வதறியாது நின்ற பொது அவர் மிக சாந்தமாக என் அருகில் வந்து கூறிய வசனம் என்னை திகைக்க செய்து விட்டது. அவர் கூறியது என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது.. 

" நீ தம் அடிக்குறது பாக்க அழகா தான் இருக்கு... (சிரிப்பு வந்தது) ஆனா இந்த அழக நீ காட்ட வேண்டிய இடம் இதில்ல தம்பி... இப்போ எல்லா பொண்ணுகளும் உன்ன பாக்கும், ஆனா, நாளைக்கு உங்க அப்பா அம்மா பாக்க கூட நீ இருக்க மாட்டே... இனியும் நீ இந்த கருமத்த அடிகனுமானு நீயே முடிவு பண்ணிக்கோ.."

அடுத்த நொடி பொழுதில் ஏழு வருடமாக இருந்த எனது ஆறாவது விரலை மறந்து... பிரிந்து விட்டேன்.. 


குறிப்பு: புகை பிடிக்கும் எல்லோருக்கும் இப்படி ஒரு புத்தர் கிடைப்பது அரிது. யாராவது சொன்னதுக்கு அப்பறம் திருந்துவதை விட இதை பார்த்த பிறகாவது திருந்துவது உத்தமம். நன்றி. 




Can't hear your comment.. So write it here..