என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Saturday

காவல்துறையிடம் நண்பனின் நாடகம்..

தந்திரமாக தப்பித்த துணிகர செயல்...



மதியம் சுமார்  12 மணி அளவில், கோவையில் உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு முக்கிய இடத்தில், தனது இரண்டு சக்கர வாகனத்தில் புயலாய் சீரிகொண்டிருந்த என் நண்பனை, திடீரென்று தமிழ்நாடு போக்குவரத்துக்கு  காவல்துறையினர் அவன் முன் சீறி பாய்ந்து சுற்றி வளைத்தனர். பிறகு தான் தெரிந்தது, இந்த கருன்காளியிடம் தலை கவசம் இல்லை என்று.....

செய்வதறியாது திகைத்து போன அவன், எப்படி தந்திரமாக தப்பித்தான் என்பது பின் வருகிறது...
காவல்: தம்பி, நிறுத்து நிறுத்து.... வண்டிய நிறுத்து..
நண்பன்: ஆஹாஆஆஆஆஆ... மாட்டிகிட்டோமே.....
காவல்: தம்பி, வண்டிய இவ்ளோ வேகமா ஓட்ட கூடாதுன்னு தெரியாத.. அறிவு இல்லையா உனக்கு.. எதுக்கு இவ்ளோ வேகமா வர்றே?
நண்பன்:  இன்ஸ்பெக்டர் அய்யா, என்ன மன்னிச்சுருங்க அய்யா.. உங்க முன்னாடி நிக்குறதுக்கு அருகதை இல்லாம தான் வண்டிய வேகமா ஓட்டிட்டு போய்டேன் அய்யா..
காவல்: என்ன தம்பி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி பேசுறே? 
நண்பன்: உங்கள பாத்தா அப்டியே எங்க அப்பா மாதிரி கம்பீரமா இருக்கீங்க. நான் லைசென்ஸ் கொண்டு வர மறந்துட்டேன் அய்யா. என் அப்பா கிட்ட நான் எப்பவும் பொய் சொன்னதில்ல, அதனால தான் உங்க கிட்ட சொல்ல மனசு வரல..
மனம் கனிந்த காவல்: சேரி தம்பி, பாது பத்ரமா வீட்டுக்கு போ.. என்று அவனை தட்டி குடுத்து அனுப்பிவிட்டு விட்டார்...


இந்த கணிசமான பேச்சில் அவன் தலை கவசம் அணியவில்லை என்பதை மறந்து மண்டை குழம்பி விட்டது, நம் மாநகரத்திற்கு....





Share |