என்னை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டுமானால்

My photo
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகும், தெளிவான சிந்தனையும், பள்ளி, கல்லூரி, வகுப்பில் முதல் மாணவனாகவும், செயல்களை கையாள கூர்மையான உறுதியும் உடைய திறன் கொண்ட நான், என்னை பற்றி பெருமையாக சொல்லி கொள்ள என்றுமே விரும்பியதில்லை....

Monday

வாத்தியார் ஆகிய வானரம்


வாத்தியார் - ந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிவதற்கு முன் சேர்த்து விட்டேன், படித்த கல்லூரியிலே ஆசிரியராக. முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கணிப்பொறி வாத்தியார். 

அட கடவுளே, உனக்கு இவன் வேலையில் சேரும் நாளன்று காலையில் மட்டும் கண் குருடாகிவிட்டதா, இப்போ மட்டும் அந்த சுனாமி எங்கே ஓடி போய் ஒளிந்து விட்டது. என்று சக நண்பர்களின் கொலைவெறி கண்ணை கட்டியது. நானே இப்படி ஒரு பதவிக்கு வந்ததை எண்ணி அச்ச பட்டேன். ஏனெனில், படிக்கும் வயதில் நான் அந்த கல்லூரிக்குள் செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. அதையெல்லாம் விவரிக்க இந்த ஒரு வலைபதிவு பத்தாது. அவ்வளவு அயோகியத்தனம், மொள்ளமாரித்தனம், முடிச்சவிக்கிதனம் செய்து விட்டேன் அந்த கல்லூரிக்குள். எப்படியோ இனியாவது ஒழுங்காக இருக்க முயற்சி செய்கிறேன். பாப்போம்....

No comments:

Post a Comment